உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி... ஓடோடி வந்த டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Apr 1, 2019, 11:50 AM IST
Highlights

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சுக்காக காத்து இருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற டிடிவி.தினகரன் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சுக்காக காத்து இருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற டிடிவி.தினகரன் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் குமாரப்பாளையத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். அப்போது ஈரோட்டின் திண்டல் மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சுக்காக காத்து இருந்தனர். 

இதனை கண்ட டிடிவி. தினகரன் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனை அழைத்து செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் விபத்துக்குள்ளானவர்களை வாகனத்தில் ஏற்றும் போது ஆம்புலன்ஸ் வந்ததால் உடனடியாக அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து டிடிவி. தினகரனின் இந்த மனிதநேயமிக்க செயல் அப்பகுதியில் கூடியிருந்த பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

click me!