
புதிய கட்சி தொடங்குவதற்கு பதிலாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போன்று புது பேரவை ஒன்றை ஆரம்பிக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல உட்கட்சி பிரச்சனைகள் வந்த வண்ணம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சசிகலாவை எதிர்த்து அதிமுகவில் இருந்து பிரிந்த ஒபிஎஸ் நாங்களே உண்மையான அதிமுக என கூக்குரலிட்டார்.
ஆனால் சசிகலா முதலமைச்சராகாத வண்ணம் மேலிடம் விளையாடியது. இதையடுத்து சசிகலா பரிந்துரையால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். ஆனால் ஒபிஎஸ் ஆல் எடப்பாடி ஆட்சி ஆட்டம் கொண்டே இருந்தது.
அதற்கு ஏற்றவாறு டிடிவியும் பதவி மோகத்தில் இழந்த அரசியல் வாழ்க்கையை நிலை நிறுத்தி கொள்ள அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இதில் எடப்பாடிக்கும் டிடிவிக்கும் மனக்கசப்பு வந்ததாக தெரிகிறது.
இதனால் ராஜ தந்திரத்தை கையாண்ட எடப்பாடி மக்கள் ஆதரவு உள்ள ஒபிஎஸ்சை சேர்த்து கொண்டு டிடிவியையும் அவரது குடும்பத்தையும் கழட்டிவிட்டார்.
இதனால் கோபமுற்ற டிடிவி சுயேட்சையாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு ஆளுங்கட்சி வேட்பாளரை தோற்கவும் அடித்தார்.
இதனிடையே சசிகலா ஆதரவால் பலன் பெற்ற 20 எம்.எல்.ஏக்கள் டிடிவி பக்கம் இருந்தாலும் அவர் தனிக்கட்சி தொடங்கினால் ஆதரவு தரமாட்டோம் என கூறி வருகின்றனர்.
இதனால் தனிக்கட்சி தொடங்கலாம் என நினைத்திருந்த டிடிவி தினகரன் தற்போது அந்த பிளானை கைவிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து டிடிவி குடும்பத்தார் பலரும் அரசியலுக்குள் வர நினைத்து பல விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இதற்காக டிடிவி அதிமுகவை கைப்பற்றுவது அப்புறம் இப்போதைக்கு ஒரு புது பேரவை ஒன்று ஆரம்பிக்கலாமா என யோசித்து வருகின்றாராம்.
இதேபோல் தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என நினைத்து புது பேரவை ஒன்றை அவர் பெயரிலேயே ஆரம்பித்தார். ஆனால் அதன் நிலைமை என்னவென்று தற்போது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் டிடிவியின் யோசனை ஜெ.தீபா நிலை போன்ற மாற்றத்திற்கா அல்லது முதலமைச்சர் சீட்டை பிடிப்பதற்கான மாற்றத்திற்கா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.