நாளை நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை வீழ்த்தியே ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாளை நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை வீழ்த்தியே ஆக வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தால் மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வரும் தம்பிதுரையிடம், ’நீங்கள் கரூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது கட்சி வெற்றிபெற்றால்தான் மத்திய அமைச்சர் பதவி. செந்தில் பாலாஜி வெற்றி பெற்றால் கரூரில் வலுவாக காலூன்றி விடுவார். அது பின்னாளில் உங்களுக்கு சிக்கலை உருவாக்கி விடும். உங்கள் பரம எதிரியான செந்தில் பாலாஜியை தோற்கடித்தே ஆகவேண்டும். இல்லையெனில் உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி இல்லை’’ என கண்டிஷன் போட்டிருக்கிறார் எடப்பாடி.
டி.டி.வி.தினகரன் தரப்பும் செந்தில் பாலாஜியை தோற்கடித்தே தீரவேண்டும். நம்பிக்கை துரோகம் செய்து விட்டு திமுகவுக்கு போனவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என சபதம் போட்டு இருக்கிறார். ஆக மொத்தத்தில் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க தேர்தலுக்கு முதல் நாள் எடப்பாடியும் டி.டி.வி.தினகரனும் ஒரே அலைவரிசையில் சபதம் போட்டுள்ளனர். சமாளிப்பாரா செந்தில் பாலாஜி? இன்னும் ஐந்தே நாட்களில் முடிவு தெரிவிந்து விடும்.