வைகோ மீது தேச துரோக வழக்கு - ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
வைகோ மீது தேச துரோக வழக்கு - ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சுருக்கம்

Treason case on vaiko postponed on june 17

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடந்தது என்ன என்ற தலைப்பில் பேசிய வைகோ மீது, அப்போதைய தமிழக அரசு தேசத்துரோக வழக்கு பதிவுசெய்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், கடந்த 25-ம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த வைகோ இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-வது செஷன்ஸ் ஆஜரானார்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழக அரசு முக்கிய பிரச்சனைகளில் கருத்து கூற மறுப்பதாகவும், மாட்டிறைச்சி தொடர்பாக கேரளா, மேற்குவங்க முதலமைச்சர்கள் கருத்து கூறும் போது தமிழக அரசு மௌனமாக இருப்பது துரதிஷ்டவசமானது எனவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!