ஜெயக்குமாரால் அது முடியுமா! நினைத்தாலே வெட்கக்கேடாக இருக்கிறது:    யார், யார் சொன்னது?

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 06:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
ஜெயக்குமாரால் அது முடியுமா! நினைத்தாலே வெட்கக்கேடாக இருக்கிறது:    யார், யார் சொன்னது?

சுருக்கம்

Today Special Bit news in political

உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி. 

*    மாநிலத்தின் கட்டமைப்பு பணிகள் வளர்ச்சிக்காக மொத்தத்தில் பனிரெண்டாயிரம் கோடி தந்தால் கூட்டணியில் நீடிப்போம். பட்ஜெட் தொடர் முடிவதற்குள் நிதியுதவியை அறிவியுங்கள் இல்லையென்றால் எங்கள் முடிவு மாறாது.

-    சந்திரபாபு நாயுடு

*    என் தொகுதியில் மக்கள் நலதிட்ட பணிகளுக்கான அழைப்பிதழில் தி.மு.க. எம்.எல்.ஏ.வான என் பெயரை போட வேண்டியிருப்பதால், அழைப்பிதழ் அடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்.
-    கீதாஜீவன்.

*    அத்தையின் (ஜெயலலிதா) வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அது சிறப்பாக நிறைவடைந்ததும், சிறப்பாக வெளியிடப்படும். 
-    தீபா

*    தினகரனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக பிரம்மாண்டமானதாக பேசப்படுகிறது.
-    கஸ்தூரி

*    நம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், பணம் வாங்கிக் கொண்டு அணியில் பதவி போட்டுக் கொடுத்துள்ளதாக வரும் தகவல்களை பார்த்தால் வெட்கக்கேடாக இருக்கிறது.
-    ஸ்டாலின்

*    மோடி பிரதமராக வராமல், வாஜ்பாய் பிரதமராக வந்திருந்தால், நாட்டில்  ஒரு பிரச்னையும் வந்திருக்காது. மோடியால் நாடே கவலைப்பட்டு கிடக்கிறது. 
-    திருநாவுக்கரசர்

*    எம்.எல்.ஏ., அமைச்சர்  பதவியின் மேலெல்லாம் எனக்கு ஆசை இல்லை. என் தாய்க்கு, மகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். என் தாய் சொன்னால் நான் அரசியலுக்கு வருவேன்.
-    ராகவா லாரன்ஸ்

*    இன்று இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையாக, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனை.
-    கடம்பூர் ராஜூ

*    கடந்த ஓராண்டுக்கு முன்னர் துவங்கிய தர்ம யுத்தத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது. அ.தி.மு.க. இயக்கமானது மக்கள் இயக்கமாகவே தொடர்கிறது. நாங்கள் ஒன்று கூடி, நிலையான அரசு தொடர்கிறது. 
-    பன்னீர் செல்வம்

*    அடுத்த சட்டசபை தேர்தலில் முடிந்தால் ராயபுரம் தேர்தலில் போட்டியிட்டு, டிபாசிட் வாங்கட்டும் அமைச்சர் ஜெயக்குமார்.
-    தினகரன்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!