TN Local Body Elections 2022 : முதல் நபராக வாக்களித்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் !!

Published : Feb 19, 2022, 07:47 AM IST
TN Local Body Elections 2022 : முதல் நபராக வாக்களித்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் !!

சுருக்கம்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

 வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அந்த வகையில்  சென்னை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது பேசிய அவர், 'யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது முக்கியமில்லை; கட்டாயம் வாக்களிப்பதே முக்கியம் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் நிச்சயமாக வாக்களிக்க வேண்டும்' என்று கூறினர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!