த.மா.கா.,விலிருந்து திமுகவுக்கு தாவிய நிர்வாகி... தழுவியபோதும் நழுவுகிறதா அதிமுக..?

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2021, 3:13 PM IST
Highlights

அதிமுக இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 
 

வேலுார் சட்டமன்ற தொகுதியை எங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள். கடந்த 1991 துவங்கி 2011 வரைக்கும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக வேலுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ஞானசேகரன்.தற்போது திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். காங்கிரஸ், த.மா.கா., என எந்தக் கட்சிக்கு சென்றாலும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று விடுவார். 

தற்போது ஞானசேகரன் ஞானசேகரன் தி.மு.க.,வில் ஐக்கியமாகி விட்டார். இருந்தபோதும் த.மா.கா.,வுக்கு இங்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் தங்களுக்கு  இந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் கேட்டு நச்சரித்து வருகிறார்கள்த.மா.கா.வினர். அத்தோடு, இந்தத் தொகுதியில் எங்கள் கட்சி சார்பில், 20 ஆண்டுகளாக பல வளர்ச்சி பணிகளை செய்து இருக்கிறோம். 40 ஆயிரம் ஓட்டுகள் எங்களுக்கு இருக்கிறது என காரணம் சொல்கிறார்கள் தமாகாவினர். அதிமுக இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

click me!