திமுகவுக்கு திஹார்... அதிமுகவுக்கு பரப்பன அக்ரஹாரா... பாஜக ஆதரவாளரா நான்..? படபடக்கும் கமல் ஹாசன்..!

By Thiraviaraj RMFirst Published Dec 7, 2020, 2:46 PM IST
Highlights

சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கமலஹாசனை பாஜகவின் பி டீம் எனக்கூறி பலரும் விமர்சனம் செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே புதுப்புது சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருந்தது. சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது என்று அவர் மீது பல்வேறு புகார் எழுந்தது.

இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.

சூராப்பாவை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சூராப்பிவிற்கு ஆதரவாக ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? என்று கேள்விக் கேட்டு அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், நேர்மையாக இருந்தால் இது தான் நிலையா. நேர்மையாக இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

இதனையடுத்து தனக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்து இருந்தார். ’’என்னுடைய நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித்துறைக்கான எனது சேவையை கருத்தில் கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு. நான் பஞ்சாப் ஐஐடி இயக்குநராக பணியாற்றியபோது, அப்போதைய முதல்வர் ப்ரகாஷ் சிங் பாதல், ஐஐடியில் பஞ்சாப் மாணவர்கள் இடம்பெற என்னென்ன கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என என்னிடம் ஆலோசனை கேட்பார். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.

நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே உள்ளது. என் மீதான புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை’’என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கமலஹாசனை பாஜகவின் பி டீம் எனக்கூறி பலரும் விமர்சனம் செய்தனர்.

இதனால் வெறுத்துப்போன கமல், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்’’ எனப்பதிவிட்டுள்ளார். 

click me!