அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னல், மழை..!! தமிழக மக்களே உஷார்...!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2020, 1:23 PM IST
Highlights

நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொண்டி (ராமநாதபுரம் 10 சென்டிமீட்டர் மழையும், வட்டானம் (ராமநாதபுரம்) குடவாசல் (திருவாரூர்) தல 6 சென்டி மீட்டர் மழையும், நாகப்பட்டினம் (மன்னார்குடி)  வேதாரண்யம் (நாகப்பட்டினம்) திருவாடானை (ராமநாதபுரம்) காரைக்கால் (காரைக்கால்) கடலூர் (கடலூர்) மீமிசல் (புதுக்கோட்டை) திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) திருவாரூர் (திருவாரூர்) அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) தலா 5 சென்டிமீட்டர் மழையும், மதுக்கூர் (தஞ்சாவூர்) மண்டபம் (ராமநாதபுரம்) தலைஞாயிறு (நாகப்பட்டினம்) பாபநாசம் (திருநெல்வேலி) பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்)  திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 4 சென்டிமீட்டர் மழையும்,

முத்துப்பேட்டை (திருவாரூர்) நீடாமங்கலம் (திருவாரூர்) பேராவூரணி (தஞ்சாவூர்) மணிமுத்தாறு (திருநெல்வேலி) நன்னிலம் (திருவாரூர்) எட்டயபுரம் (தூத்துக்குடி) தல 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

click me!