ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆராவாரம் செய்யும் குஷ்பு... வாக்காளர் வீட்டுக்கு சென்று செய்த காரியம்...!

By vinoth kumarFirst Published Mar 23, 2021, 7:25 PM IST
Highlights

பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள குஷ்புவிற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. 

பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள குஷ்புவிற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. 

பாஜகவின் முக்கிய நட்சத்திர வேட்பாளரான குஷ்பு ஆயிரம் விளக்கு பகுதியில் தினந்தோறும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். பிற தொகுதிகளில் முன்னணி வேட்பாளர்களுக்கு அளிக்கப்படுவது போலவே முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் குஷ்புவிற்கும் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், பூ தூவியும் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். 

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி இல்லை என்பது முடிவானதால் வருத்தத்தில் இருந்த குஷ்புவிற்கு ஜாக்பாட்டாக ஆயிரம் விளக்கு தொகுதி கிடைத்துள்ளதால், தீயாய் வேலை செய்து வருகிறார். மனைவிக்காக இதுவரை அரசியல் செயல்பாடுகளில் தலைகாட்டாமல் இருந்த சுந்தர் சி கூட நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தற்போது தேர்தல் களத்தில் பிற வேட்பாளர்கள் செய்யும் ட்ரெண்டிங் சாகங்களைப் போலவே குஷ்புவும், இன்று வாக்கு சேகரிக்க சென்ற வீட்டில் தேநீர் வைத்து அசத்தியுள்ளார். 

தேர்தல் வந்துவிட்டாலே வாக்கு வேட்பாளர்கள் பலரும் வாக்காளர்களுக்கு துணி துவைத்து கொடுப்பது, ஓட்டல் கடையில் தோசை சூடுவது, காய்கறி வியாபாரம் செய்வது என பல்வேறு வித்தியாசமான விஷயங்களை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரித்த குஷ்பு, வாக்காளர் வீட்டின் சமையல் அறை வரை சென்று அனைவருக்கும் டீ வைத்து கொடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

click me!