சட்டமன்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என நேற்று மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து அவ்வாறு அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறி இருந்தார்,. இது பற்றி பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும் என்றார்.
இது பற்றிய கேள்விக்கு திருநாவுக்கரசர் பதிலளித்து கூறியதாவது:
சட்டமன்ற குழுக்கள் அமைக்கப்படவேண்டும், அதை கால தாமதம் செய்யாமல் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற குழு அமைப்பது தொடர்பாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுப்பது வரவேற்கத்தக்கது. சட்டமன்ற குழு அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும் . இவ்வாறு தெரிவித்தார்.