
தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க ஏற்கனவே காவல்துறையில் மூன்று பிரிவுகள் உள்ள நிலையில் தீவிரவாத தடுப்புக்கென தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் எழுச்சி அடைந்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவுக்கு எதிராக நடத்த வாய்ப்புகள் இருக்கிறது. இலங்கையுடன் எல்லையை தமிழகம் பகிர்ந்து கொள்ளும் நிலையில் தமிழகத்திலும் தீவிரவாத தாக்குதல் ஆபத்து இருக்கிறது. எனவே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு காவல்துறை சிறப்பாக செய்து வந்தாலும், தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு என தனிச் சிறப்புப் பிரிவு ஏதும் இல்லை, ஒருவேளை தீவிரவாத தாக்குதல் நடந்தால், அதைத் தடுப்பதற்கு பிரத்தியேக தடுப்பு பிரிவு தமிழக காவல்துறையில் இல்லை.
இதையும் படியுங்கள்: சொந்தக் கட்சியினரை பார்த்து பயப்படும் முதல்வர் ஸ்டாலின்.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி..!
எனவே அதை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்பதுடன் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நல்ல முறையில் உள்ள நிலையில், பயங்கரவாத தடுப்பு படை அமைக்க கோரி வழக்கு தொடுத்தது ஏன் என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படியுங்கள்: நாட்டை அழிக்க நினைக்கும் அங்கியை விட , லுங்கியை விட , சங்கியாக இருப்பது மேல்... பாஜக ராம ஸ்ரீனிவாசன்.
இதற்கு மனுதாரர் ஜெகநாதன், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர், எனவே எதிர்காலத்தில் அவர்கள் மூலம் தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது, எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாத தடுப்புக்கு என பிரத்தியேக சிறப்பு படை அமைக்க வேண்டும் என கோரினார். எனவே இதுதொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இலங்கையில் நடந்ததைபோல தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை மத்திய அரசு சம்பந்தப்பட்டதாகும், ஏற்கனவே பயங்கரவாதத்தை தடுக்க தமிழக காவல்துறையில் மூன்று சிறப்புப் படைகள் உள்ளன. எனவே அதற்கென தனியாக படைப்பு அமைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இலங்கையில் தேவாலயம் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த மனுவுக்கு நான்கு வார காலத்தில் பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.