நெருங்கும் தேர்தல்... தலா ரூ.1 லட்சம் அறிவிப்பு... மாற்றுக்கட்சியினரை மிரண்டுபோக வைத்த குஷ்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 31, 2021, 5:39 PM IST
Highlights

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கும் போது, ரூ. 1 லட்சம் ரூபாய் வைப்பு நிதி உடனடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கும் போது, ரூ. 1 லட்சம் ரூபாய் வைப்பு நிதி உடனடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு இன்று தனித் தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டார். இதுகுறித்து பேசிய அவர் “ அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும். தொகுதி நிதியில் இருந்து சுமார் 70% நிதி பெண்களுக்காக செலவிடப்படும். தேர்தல் அறிக்கையில் நாங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

பெண் குழந்தை பிறந்தால் இன்று பாரமாக நினைக்கும் குடும்பங்கள் உள்ளன. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கும் போது, ரூ. 1 லட்சம் ரூபாய் வைப்பு நிதி உடனடியாக செலுத்தப்படும். அந்த குழந்தை வளர வளர படிப்பு செலவுக்கு அந்த தொகை உதவும்” என்று தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு வருகின்றனர்

click me!