எங்களுக்கு அவகாசம் தேவையில்லை..! - டெல்லி பறக்கும் ஈபிஎஸ் - ஒபிஎஸ்

Asianet News Tamil  
Published : Sep 28, 2017, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
 எங்களுக்கு அவகாசம் தேவையில்லை..! - டெல்லி பறக்கும் ஈபிஎஸ் - ஒபிஎஸ்

சுருக்கம்

The OBS-EPS team will go to Delhi to submit additional documents to the Election Commission.

தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி மாலையில் டெல்லி செல்ல உள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் அவர்களுடன் செல்கின்றனர். 

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து பன்னீர்செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது. 

இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இரு தரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வந்தது.

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது. 

எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 

மேலும் செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் குறித்து பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. 

இதைதொடர்ந்து இரட்டை இலை விவகாரத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் கோரி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துள்ளார். 

ஆனால் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி மாலையில் டெல்லி செல்ல உள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் அவர்களுடன் செல்கின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!