அரசு நடத்தும் மருத்துவமனை மீது அரசே நம்பிக்கை வைக்கவில்லை; சொல்கிறார் சீமான்!

Asianet News Tamil  
Published : Sep 25, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
அரசு நடத்தும் மருத்துவமனை மீது அரசே நம்பிக்கை வைக்கவில்லை; சொல்கிறார் சீமான்!

சுருக்கம்

The government did not believe the government-run hospital

அரசு நடத்தும் மருத்துவமனை மீது அரசே நம்பிக்கை வைக்கவில்லை என்றும் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதிக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய சீமான், கல்வி என்பது மானிட உரிமை என்றும் அதைத் தரவேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்.

ஆனால், தற்போது எல்லாம் வியாபாரமாக மாறிவிட்டது. எல்லா துறைகளிலும் தனியார் மயம்தான். பிறகு அரசு எதற்கு இருக்கிறது? ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனைக்குத்தான் சென்றார்கள். ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

அரசு நடத்தும் மருத்துவமனைமீது அரசுக்கே நம்பிக்கை இல்லை என்றும் அரசு மருத்துவமனைக்குப் போயிருந்தால், 7 நாட்களிலேயே உயிர் பிரிந்திருக்கும் என்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்தான் 75 நாட்கள் கழித்து உயிர் பிரிந்துள்ளதாகவும் சீமான் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தின் 'பவர் சென்டர்' எது? 2026-ல் ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் 10 'மெகா' தொகுதிகள்.! லிஸ்டில் உங்கள் தொகுதி இருக்கா?
களைகட்டும் தேர்தல் திருவிழா... நட்சத்திர தொகுதிகளில் களம் காணும் வேட்பாளர்கள் யார்... யார்?