ஹரி நாடார் நிர்வாணப்படத்தை மனைவிக்கே அனுப்பி வைத்த காதலி..?? இமேஜை டோட்டலாக காலி செய்த மலேசியா மஞ்சு

By Ezhilarasan BabuFirst Published Jan 27, 2022, 12:36 PM IST
Highlights

ஆனால் மாறாக என் மீது புகார் கொடுக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவை நான் வெளிப்படையாக கூறியிருக்கிறேன், இதில் தவறு என்ன இருக்கிறது? இது தொடர்பாக ஷாலினியுடன் நான் மனம் திறந்து பேச தயாராக இருக்கிறேன். 

ஹரிநாடார் தன்னுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை காதலி மஞ்சு முதல் மனைவிக்கு அனுப்பி வைத்ததாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மஞ்சு இதை  மறுத்துள்ளார். தனக்கு முன்பாகவே அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும், அதையெல்லாம் கேட்காத அவரது மனைவி இப்போது தன்னை மட்டும் கேட்பது எதற்கு என கேள்வி எழுப்பி உள்ளார். 

பொதுவாக மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்ட விரும்புபவர்கள்  தனது தோற்றத்தை வித்தியாசமாக மாற்றுவார்கள், இல்லையெனில் தனது தனித்திறமையை வளர்த்துக் கொள்வார்கள், அந்த வகையில் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு தனது தோற்றத்தையே மாற்றிக் கொண்டு பந்தாவாக வலம் வந்தவர்தான் ஹரி நாடார். தமிழகத்தை பொறுத்தவரையில் இப்போது இவர்தான் ஹாட் டாபிக்.  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டு படை மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளியதால் ஹரிநாடாரின் அரசியல் செல்வாக்கு உயர்ந்தது. அவரிட் தவறான நடவடிக்கைகளால் அந்த இமோஜ் மொத்தமும் சுக்கு நூறாக நெறுங்கியுள்ளது. 

வாழ்க்கையில் எப்படியாவது உயர வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். திருநெல்வேலி மாவட்டம் மேல  இலந்தை குளத்தை சேர்ந்த  ஹரி நாடார் சிறுவயதிலேயே பிழைப்புத் தேடி சென்னை வந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கடைகளில் வேலை பார்த்த அவர், பிறகு தனியாக தொழில் ஆரம்பித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். நாடார் சமூக தொழிலதிபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பின்னர் காலப்போக்கில் தொழில் அதிபராக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் வட்டி தொழிலில் இறங்கிய அவர் பலமுறைகேடுகள் செய்தே முன்னுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் பனங்காட்டு படை என்ற கட்சியில் ராக்கெட் ராஜா என்பவருடன் சேர்ந்து அரசியல்வாதியாக மாறினார் அவர். ஆலங்குளம் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2வது இடத்திற்கு முன்னேறினார்.

அதன்பிறகு தன்னை பெரிய அரசியல் தலைவராக கருதத் தொடங்கிய ஹரி நாடார், பல பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வது, பலரையும் ஏடாகூடமாக விமர்சிப்பது எனது இருந்து வந்தார். இந்நிலையில்தான் சீமான் விஜயலட்சுமிக்கு இடையே நடந்து வரும் மோதலில் தலையிட்டு கருத்து கூறிய ஹரிநாடார்,  நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் கொடுத்ததோடு, தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த இருவருக்கு வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் ஹரி நாடாரை கைது செய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஹரி நாடாரின் மனைவியெனக் கூறிக்கொள்ளும் மலேசியாவில் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், சிறையில் உள்ள ஹரி நாடாரை ஜாமினில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன், தனக்கும் ஹரி நாடாருக்கும் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார். 

இது ஹரி நாடார் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல் மனைவி ஷலானிக்கும் மஞ்சுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொலைபேசியில் மோசமாக ஒருவரை ஒருவர் வசைபாடும் ஆடியோக்களும் சமூக வலைதளத்தில் பரவு வைரலாகி வருகிறது. இந்நிலையில் தன்னுடன் ஹரி நாடார் படுக்கையறையில் இருந்த புகைப்படங்களை மஞ்சு அவரின் முதல் மனைவிக்கு அனுப்பி வைத்த தாகவும் அது தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும் முதல் மனைவி ஷாலினி புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விலக்கமாக பேட்டி கொடுத்துள்ளார் மஞ்சு.  ஹரி நாடார் நிர்வாணப்படத்தை அனுப்பியதாக கூறும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். மேலும் ஹரிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதை எல்லாம் தட்டிக் கேட்காத மனைவி தன்னை மட்டும் ஏன் கேட்கிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கொடுத்துள்ள பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:- ஹரி நாடாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே உறவு சரியில்லை. அதனால்தான் அவர் என்னைத் தேடி வந்தார். 

நான் ஹரி நாடாருக்கும் குழந்தை இருக்கிறது. நான் அவரை மிரட்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக கூறுகிறார்கள், இந்த விவகாரத்தில் என்னை மட்டுமே குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் முதல் மனைவி என சொல்லிக் கொள்ளும் ஷாலினி அவர்கள் ஹரிநாடார் கைது செய்யப்பட்டது முதல் இதுவரை அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவரை கைது செய்யப்பட்டது முதல் அவருடன் கைதானதுடன், இப்போது அவர் மீட்கவும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவரை நான் விரும்புகிறேன் என்பதை காட்டிலும் அவரை இப்போது காப்பாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது. இப்போது எனது காதல், எங்களது உறவு அனைத்தும் கொச்சைப்படுத்தபடலாம்,  முதலில் அவர் விடுதலையாகி வெளியில் வரட்டும் அதன்பிறகு அவரே உண்மை என்ன என்று கூறுவார். எனக்கும் ஹரி நாடாருக்கும் உறவு இருக்கிறது என்றால் ஹரிநாடார் மீது அல்லவா அவரது மனைவி புகார் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் மாறாக என் மீது புகார் கொடுக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவை நான் வெளிப்படையாக கூறியிருக்கிறேன், இதில் தவறு என்ன இருக்கிறது? இது தொடர்பாக ஷாலினியுடன் நான் மனம் திறந்து பேச தயாராக இருக்கிறேன். ஆனால் அவரது நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கிறது.  மொத்தத்தில் ஷாலினியை பார்த்தால் எனக்கு பாவமாக இல்லை, கோபமாக இருக்கிறது, காரணம் அவரின் நடவடிக்கைகள் அப்படி உள்ளது. தற்போது ஹரி நாடார் அவர்கள் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதற்கு அவரது மனைவிதான் காரணம், அவர் யாருடன் தொடர்பு இருந்தாலும் அது எனக்கு கவலையில்லை, ஆனால் எனக்கும் அவருக்கும் இடையில் உறவு இருக்கிறது என்பதுதான் உண்மை. ஹரி நாடார் உடனிருந்த படுக்கையறை புகைப்படங்களை நான் எனது செல்போனில் ஸ்டேடசாக வைத்திருந்தேன் அதை எடுத்து அவர்கள்தான் தவறாக சித்தரித்து பரப்பினார்கள்.

ஹரி நாடாருடனான நிர்வாண படத்தை நான் அவருக்கு அனுப்பியதாக ஷாலினி கூறுகிறார், ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஹரி நாடார் நிர்வாண படங்கள் ஷாலினி கைக்கு எப்படி போனது என்பது எனக்கு தெரியாது, தொலைபேசியில் அவரை வசை பாடியதற்கான ஆதாரங்கள் மட்டும் வெளிவருகிறது, ஆனால் அவர் பேசியதற்கான ஆதாரங்கள் வெளிவரவில்லை, நான் அதில் கொச்சையாக பேசியதாக கூறுகிறார்கள் அதற்கு காரணமும் அவர்கள்தான். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
 

click me!