திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது, மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது, மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’நீட் தேர்வு காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டதுதான். நீட் தேர்வு குறித்த தவறான பிரச்சாரம், கடினமாக உழைத்து தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும். எத்தனையோ காரணங்கள் இருக்கும்போது, நீட்டை வைத்து திமுக அரசியல் செய்ய வேண்டாம்.
பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதும், கண்காணிப்பதும் மாநில அரசின் பொறுப்பு’’என அவர் கூறினார்.