ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களும் முதல்வரின் நிவாரண அறிவிப்புகளும்..!

 
Published : Dec 11, 2017, 06:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களும் முதல்வரின் நிவாரண அறிவிப்புகளும்..!

சுருக்கம்

The crops affected by the storm and the relief of the Chief Minister

ஒகிபுயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்ய தோட்டக்கலையை சேர்ந்த 90 குழுக்களை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

முதற்கட்ட ஆய்வில் 3,623 ஹெக்டேர் பரப்பிற்கும் அதிகமாக தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதில், வாழை சுமார் 1,900 ஹெக்டேர் பரப்பிலும் ரப்பர் மரங்கள் சுமார் 1, 400 ஹெக்டேர் பரப்பிலும் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 48 ஆயிரத்து 500 முதல் ரூ. 63 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கிராம்பு விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய உதவியுடன் சேர்த்து மொத்தம் ஹெக்டேருக்கு ரூ. 28 ஆயிரம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!