’மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றியல்ல...’ மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 9, 2019, 5:29 PM IST
Highlights

மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என்கிற அதிமுகவின் பரப்புரை பொய்யாக்கி இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என்கிற அதிமுகவின் பரப்புரை பொய்யாக்கி இருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது பேசிய அவர், ’’மிட்டாய் கொடுத்து பெற்ற வெற்றி என்கிற அதிமுகவின் பரப்புரையை மக்கள் நிராகரித்து இருக்கின்றனர். நம்மை வளர்த்தெடுத்து வழிகாட்டிய நெஞ்சில் குடியிருக்கும் கலைஞரின் காலடியில் இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம்.

 

வேலூரில் வெற்றிபெற்றதால் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற அந்தஸ்தை நிலைநிறுத்தி இருக்கிறோம்.  நான் முட்பட திமுகவின் அனைத்து களப்பணியார்களுக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு. வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி. வெற்றியை தாமதப்படுத்தலாம். ஆனால் தடுக்க முடியாது என்பது போல திமுக வெற்றிப் பயணத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!