சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக – பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்தார்.
1/5
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிமன்ற தேர்தலுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல்..
- நமது மாநில தலைவர் திரு. pic.twitter.com/KupBipy4Cj
இந்நிலையில்,சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேருராட்சிகள் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 112 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.