அதிமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மேலும் 10 எம்ஏக்கள் மீது வழக்கு பதிவு.. அலறவிட்ட தமிழக காவல் துறை.

By Ezhilarasan BabuFirst Published Aug 11, 2021, 9:18 AM IST
Highlights

குற்றத்தில் முகாந்திரம் இருப்பதாக கூறி, எஸ் பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், ஜேசிபி பொறியாளர்கள் கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய 10 நிறுவனங்களின் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 10 அதிமுக எம்எல்ஏக்கள், மற்றும் 520 அதிமுக தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமன்,கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ், கிணத்துக்கடவு தாமோதரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை அதிமுக தொண்டர்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 52 இடங்களில் அந்த சோதனை நடைபெற்ற நிலையில் இறுதியாக அது 60 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஏற்கனவே முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி ஒப்பந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது. 

குற்றத்தில் முகாந்திரம் இருப்பதாக கூறி, எஸ் பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், ஜேசிபி பொறியாளர்கள் கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்புடைய 10 நிறுவனங்களின் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. சென்னை கோவை திண்டுக்கல் என பரவலாக இந்த சோதனையும் நடைபெற்றதால், அதிமுக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதிகள் எஸ்.பி வேலுமணி இருந்த நிலையில் அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் எம்எல்ஏ விடுதி வெளியில் ஆயிரக்கணக்கில் அதிமுகவினர் திரண்டனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேபோல் கோவையில் எஸ். பி வேலுமணி வீட்டுக்கு வெளியே ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.அப்போது சில தொண்டர்கள் பேரிகார்டர்களை தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு தாமோதரன், பி.ஆர்.ஜி அருண்குமார், சூலூர் கந்தசாமி, வால்பாறையில் கந்தசாமி, ஜெயராமன், ஏ.கே செல்வராஜ்,  எம்.எஸ்.எம் ஆனந்தன் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, கொரோனா நோய்த்தொற்று பரப்புவது, உட்பட மூன்று பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் அங்கு திரண்ட 520 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

click me!