தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ,அங்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கிறது.
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 67 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.அதன்படி அக்கட்சியே வாக்கு எண்ணிக்கை நிலவரத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து தெலங்கானாவில் சந்திர சேகர ராவ் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.