அடித்து ஆடத் தொடங்கிய அண்ணாமலை.. 15 மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம்.. தூள் கிளப்பும் பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2021, 9:13 AM IST
Highlights

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி  மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் தலைமையில் தென்காசியில் தொடங்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி  மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் தலைமையில் தென்காசியில் தொடங்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர்கள் கரு.நாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் 1-9-2021 புதன்கிழமை முதல் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். இந்தப் பயணத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சமுதாய தலைவர்கள் சந்திப்பு, கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு கூட்டம், கிளை நிர்வாகி இல்லத்திற்கு செல்லுதல் என நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கிறது. 

இதே அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.முதற்கட்ட சுற்றுப்பயணம் வருகிற 1-9-2021 ஆம் தேதி அன்று தென்காசி மாவட்டத்தில் தொடங்கி 15 மாவட்டங்களில் நடைபெறும், தென்காசி மாவட்டத்தில் 1-9-2021 ஆம் தேதி காலை 10 மணிக்கு பாவூர்சத்திரத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் 12:00 மணி அளவில் தென்காசியில் சமுதாய தலைவர்கள்  கூட்டத்திலும், பிற்பகல் நெற்கட்டும் சேவல் மாவீரன் புலித்தேவன் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சியிலும், மாலை 4 மணிக்கு சங்கரன்கோவில் நகரில் நடைபெறும் மாணவர்கள் சந்திப்பு  கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

 தூத்துக்குடி

இரண்டாம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மூன்றாம் மயில் அருகில் நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திலும், நண்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி நகரில் சமுதாய தலைவர்கள் சந்திப்பு கூட்டத்திலும், பெருந்தலைவர் காமராஜ் கல்லூரியில் நடைபெறும் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திலும் மாநிலத் தலைவர் அவர்கள் பங்கேற்கிறார். நெல்லை தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளில் சட்டமன்ற பாஜக குழு தலைவர் திரு நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அவர்களும் மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

5ஆம் தேதி வா.ஊ சிதம்பரனார் அவர்கள் விழா :

ஐந்தாம் தேதி காலை 10 மணி அளவில் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் பயணத்தைத் தொடர்ந்து திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார், 6ஆம் தேதி அன்று தர்மபுரி,  11 ஆம் தேதி அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் பிறந்தநாள் விழாவிலும், 14ஆம் தேதி கள்ளக்குறிச்சி, 15ஆம் தேதி மயிலாடுதுறை, 16ஆம் தேதி விழுப்புரம், 17,18 தேதிகளில் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்,

19ஆம் தேதி வட சென்னை கிழக்கு, 20 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், 22 ஆம் தேதி மதுரை புறநகர், 24ஆம் தேதி சென்னை மேற்கு, இருபத்தி ஆறாம் தேதி கன்னியாகுமரி, 27 ஆம் தேதி சிவகங்கை, 28 ஆம் தேதி திண்டுக்கல் மேற்கு மாவட்டம், 29 ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு என மாவட்டம் தோறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் மாணவர்களுடன்  கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.

மாநில அளவில் ஓபிசி அணி தலைவர் திரு. லோகநாதன் அவர்களின் தலைமையில், மாநில செயலாளர் வரதராஜன், இளைஞரணி மாநில தலைவர் திரு வினோஜ் பி செல்வம், இளைஞர் அணி பொதுச் செயலாளர் திரு.ராஜ்குமார் மற்றும் அந்தந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்ட சுற்றுப்பயண பணி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சுற்றுப்பயண தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!