கையில் பணமின்றி தவித்த தப்லீக் ஜமாத்தினருக்கு உதவி.. இஸ்லாமியர்கள் மத்தியில் ஸ்கோர் செய்த MP ரவீந்திரநாத்..!

By vinoth kumarFirst Published May 17, 2020, 6:53 PM IST
Highlights

டெல்லி தப்லிக் மாநாடு சென்று தனி ரயிலில் தமிழகம் திரும்பும் 700 இஸ்லாமியர்களின் ரயில் கட்டணத்தையும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஏற்றுக்கொண்டுள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வாக்களித்தற்காக கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பினர் இன்று எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும்  தெரிவித்துள்ளனர். 
 

டெல்லி தப்லிக் மாநாடு சென்று தனி ரயிலில் தமிழகம் திரும்பும் 700 இஸ்லாமியர்களின் ரயில் கட்டணத்தையும் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஏற்றுக்கொண்டுள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வாக்களித்தற்காக கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்பினர் இன்று எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் கடந்த ஒரு 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 3000 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.  இப்பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராடி வந்த டெல்லி அரசு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 2500 பேரை வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது.

அதாவது டெல்லியில் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பலருக்கும் கொரோனா பரவ ஜமாத்தினர் காரணமாக இருந்ததாக கூறி,  டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஜமாத் உறுப்பினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதுடன் ,  பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த தப்லீக் ஜமாத்தினர் மீது விசா நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.  

முன்னதாக நிஜாமுதீனில் உள்ள  மார்க்கஸ் மசூதியிலிருந்து சுமார் 2346 பேரை மத்திய அரசு வெளியேற்றியது. அவர்களில் 632 பேர் மருத்துவமனைகளுக்கும் மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகியும் கொரோனா பாதிப்பில்லாத தப்லீக் உறுப்பினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இதில் தலையிட்ட  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி  அரசு,  உள்துறை அமைச்சகத்துக்கு இரண்டு முறை கடிதம் எழுதியது அதில்,  தப்லீக் ஜமாத்தினரை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 

 ஆனால்,  அந்த கடிதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வராததை அடுத்து  வெளிநாடுகளைச் சேர்ந்த 167 தப்லீக் உறுப்பினர்களை தவிர மீதமுள்ள இந்தியாவை சேர்ந்த 2446 பேரை அவரவர் வீடுகளுக்கு  அனுப்பி வைக்க டெல்லி அரசு அதிரடியாக முடிவெடுத்தது. இந்நிலையில் அவர்களை மீட்டு வர  அண்ணாசாலை மக்கா மசூதியின் இமாமும், முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான மன்சூர் காஸிபி, தொழிலதிபர் புரபஷனல் மீரான் போன்றோர் கொண்ட குழுவும்,  தமுமக, மஜக, எஸ்டிபிஐ  போன்ற கட்சிகளும் முனைப்புக் காட்டிவந்தன. 

இந்நிலையில்,  தமிழகம் திரும்ப போதிய வசதியின்றி  தவித்து வந்த தப்லீக்  ஜமாத் உறுப்பினர்களின் ஏழ்மை நிலை அறிந்த  தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தாமாக முன்வந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்யவும், அவர்கள் தமிழகத்துக்கு திரும்புவதற்கான முழு பயணச் செலவையும் ஏற்றுக் கொள்ளவதாக தெரிவித்தார், இந்நிலையில் இன்று மதியம் 3:30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட சிறப்பு  ரயிலில் தப்லீக் ஜமாத்தினர் உற்சாகத்துடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். 

கையில் பணமின்றி தவித்திருந்த தங்களுக்கு முன்வந்து  உதவிய எம்.பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு அவர்கள் நன்றி கூறிக் கொண்டதுடன், புறப்படுவதற்கு முன் அவருக்காக துவா என்னும் சிறப்பு பிரார்த்தனை நடத்தி தங்களது இதயபூர்வமான நன்றிகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதே இஸ்லாமியர்கள் மக்களவை குடியரிமை சட்டத்திற்கு எதிராக வாக்களித்த  எம்.பி.ரவீந்திரநாத் குமாருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு இந்த அமைப்பினருக்கு இன்று உதவி செய்து ஸ்கோர் செய்துள்ளார். 

click me!