செப்டம்பர் 8 –ல் பதவி ஏற்கிறார் தமிழிசை ! தெலங்கானா ஆளுநராகிறார் !

Published : Sep 03, 2019, 08:53 PM ISTUpdated : Sep 03, 2019, 09:38 PM IST
செப்டம்பர் 8 –ல் பதவி ஏற்கிறார் தமிழிசை ! தெலங்கானா ஆளுநராகிறார் !

சுருக்கம்

தெலங்கானா மாநில ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கிறார்.  

தமிழக பா.ஜ.க தலைவராக .தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறை பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார்.  வரும் டிசம்பர் மாதத்துடன்  அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில்தான்  தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழிசைக்கு எதிர்க்கட்சி உள்பட பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த நிலையில், ஆளுநருக்கான நியமன ஆணையை  தமிழிசை இன்று பெற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழிசை வருகிற 8-ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்கிறார்.

இது தொடர்பாக பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும்  பாலமாக இருந்து செயல்படப் போவதாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் வீரர்களின் நாடகம்... சுக்குநூறாக உடைத்த இங்கிலாந்து வீரர்..!
இனி விசிலு பறக்கும் பாரு.! ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு லட்சம் விசில்கள்.?! அடித்து விளையாடும் விஜய்.! இப்படி பண்றீங்களேப்பா.!