செப்டம்பர் 8 –ல் பதவி ஏற்கிறார் தமிழிசை ! தெலங்கானா ஆளுநராகிறார் !

Published : Sep 03, 2019, 08:53 PM ISTUpdated : Sep 03, 2019, 09:38 PM IST
செப்டம்பர் 8 –ல் பதவி ஏற்கிறார் தமிழிசை ! தெலங்கானா ஆளுநராகிறார் !

சுருக்கம்

தெலங்கானா மாநில ஆளுநராக செப்டம்பர் 8-ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கிறார்.  

தமிழக பா.ஜ.க தலைவராக .தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறை பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார்.  வரும் டிசம்பர் மாதத்துடன்  அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில்தான்  தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தமிழிசைக்கு எதிர்க்கட்சி உள்பட பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இந்த நிலையில், ஆளுநருக்கான நியமன ஆணையை  தமிழிசை இன்று பெற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழிசை வருகிற 8-ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்கிறார்.

இது தொடர்பாக பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்திற்கும், தெலங்கானாவிற்கும்  பாலமாக இருந்து செயல்படப் போவதாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்.. நாளை என்ன நடக்கும்? டெல்லி போலீசிடம் உதவி கேட்ட தவெக!
ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!