
அதே 72 நாட்கள்...!! அப்பொல்லோவில் ஜெ 72 நாள் .... சசிகாலாவிற்கு தீர்ப்பும் 72 ஆவது நாளிலே....!!
ஜெ மறைவு :
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், உடல் நலக் குறைவால் சென்னை அபோல்லோ மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், ஒரு கட்டத்தில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். சரியாக 7 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா :
மறைந்த ஜெயலலிதாவிற்கு, பின்னர் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, பின்பு முதல்வராகும் வாய்ப்பு வரும் போது, அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தலை எடுக்க தொடங்கியது. இதனிடையே அதிமுக கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது . ஒன்று சசிகலா தலைமையிலும், மற்றொரு அணி பன்னீர் தலைமையிலும் உள்ளது.
அதே 72 நாட்கள் :
இந்நிலையில், சசிகலாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய இந்த நாள், ஜெயலலிதா இறந்து சரியாக 72 ஆவது நாள் என்பது குறிபிடத்தக்கது.