வெற்றி பெற்றது உண்ணும் போராட்டம்...! உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் ஜீயர்...! காரணம் பிஜேபி விசுவாசிகள்தானாம்...!

First Published Feb 9, 2018, 2:47 PM IST
Highlights
SV. Shekhar has announced that he will withdraw the hunger protest


வைரமுத்துவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த ஜீயர் ஹெச்.ராஜா, எஸ்வி. சேகர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 

ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள், ஸ்ரீவில்லி. ஜீயர் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை என்று ஜீயரிடம் வலியுறுத்தியுள்ளார். 

இதையடுத்து  உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரை பாஜகவின் எஸ்வி சேகர் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.

அப்போது, மடாதிபதிகள் உண்ணாவிரதம் இருப்பதால் தான் கோயில்களில் தீ விபத்து ஏற்படுவதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தார். 

இதனிடையே, வைரமுத்துவை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரை கண்டித்து கோயம்புத்தூரில் தந்தை பெரியார் கழகத்தினர் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வைரமுத்துவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த ஜீயர் ஹெச்.ராஜா, எஸ்வி. சேகர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 
 

click me!