முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதியின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்த சண்முகநாதன் மறைவிற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழக தொண்டர்களுக்கு கண்ணீர் மடல் எழுதியுள்ளார்.