
நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார். இதுபற்றி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஸ்டாலினுடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் பிரச்சாரம் செய்வார் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரசும் திமுகவும் உரசலில் ஈடுபட்டுள்ள நிலையில் திடீரென மு.க.ஸ்டாலினுடன் பேசி அவரை பாண்டிச்சேரியில் பிரச்சாரம் செய்ய வைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதன் படி நாராயணசாமி தனிப்பட்ட முறையில் திமுக தலைவருடன் பேசி மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.