உங்களுக்கு நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் - மு.க.ஸ்டாலின் ஊடகங்கள் மீது பாய்ச்சல்

First Published Dec 27, 2016, 3:37 PM IST
Highlights


ராம் மோகன் ராவின் பேட்டி குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் முன்பு தான் ஜெயலலிதாவிடம் பேட்டி கேட்க மாட்டீர்கள் இப்போது ஓபிஎஸ் தானே முதல்வர் அங்கு போய் கேட்க வேண்டியது தானே என்று ஆவேசமானார்.

 செய்தியாளர்களை சந்தித்த மு.ஸ்டாலின் "ராமமோகனராவ்வின் பேச்சிற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தான் விளக்கமளிக்க வேண்டும்" என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டதும் ஆவேசமாக "என்னை ஏன் கேட்கிறீர்கள், அந்தம்மா முதல்வராக இருந்த போது நீங்கள் சந்திக்கவில்லை. தற்போது ஒபிஎஸ் இருக்கிறார் எனவே அவரிடம் போய் நீங்கள் (ஊடகத்துறை) உங்கள் கேள்விகளை கேட்டு பதிலை வெளியிட்டால் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்" இவ்வாறு அவர் கூறினார்.

click me!