"ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது" தமிழகத்தை தெறிக்கவிடும் தியானம் பார்ட் 2!

First Published Jan 25, 2018, 10:32 AM IST
Highlights
Special Stories about meditation


பதவி பறிகொடுத்த கடுப்பில் பன்னீர் தியானம் இருந்ததில் தொடங்கி, அத்தை சமாதியில் ஆற அமர தியானம் போட்டு வந்த தீபாவை அடுத்து குடும்ப சண்டையால் வந்த மாதுகுட்டி ஒரு குட்டி தியானம் போட்டார், இவரை அடுத்து வந்து சபதம் செஞ்ச சின்னம்மா ஜெயிலுக்கு போகும் முன் புரட்சித்தலைவர் வீட்டுக்கே போய் தியானமிருந்தார். இப்படி தியானத்தால் தடுமாறிக்கொண்டிருந்த தமிழகத்தில் தற்போது தலையை கொடுத்து சிக்கிக் கொண்டவர் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்.

ஆமாம் எதுக்காக இந்த தியானம்? புள்ளி வச்சது யார்? 

பிள்ளையார் சுழி போட்ட பன்னீர்...

கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த தியானப் புரட்சியை தமிழக மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தான். முதல்வர் பதவியை சசிகலா பறித்துவிட்டதால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் திடீரென்று மெரீனா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து சுமார் நிமிடம் ஒட்டு மொத்தத்த தமிழகத்தையும் கதறவிட்டார். பன்னீர் தொடக்கி வைத்த இந்த தியானப் புரட்சி, அதிமுக தொண்டர்கள் யார் எப்போது தியானம் செய்வார்கள், எந்த நேரத்தில் சமாதிக்கு போவார்கள் என்ற பீதி இன்னும் ஓயவில்லை.

தீபாவின் தியானம்...

சசிகலா மீது இருந்த கோபத்தில்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா பிறந்தநாளன்று எம்ஜியார் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் பேரவை துவங்கினார். இதன் பொருளாளராகவும் தன்னை தானே நியமித்து கொண்டார். இதனையடுத்து அவர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதாக அறிவித்தார். மேலும் ஒருநாள் இரவு 7.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தனது அத்தையின் நினைவித்திற்கு வந்த தீபா, பேரவை உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வைத்து அங்கு தியானத்தில் அமர்ந்தார்.

தீபாவுடன் அவரது கணவரும் தியானத்தில் அமர்ந்துள்ளார். தீபாவின் தியாகத்திற்கான காரணம் விபரங்கள் இதுவரை சொல்லப்படவில்லை, ஓபிஎஸுன் மெரினா புரட்சியை போல தீபாவின் தியானம் தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருமா? என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் புசுவானமாக்கிப்போனது தீபாவின் தியானம்...

மாதவனின் குட்டி தியானம்...

ஒருநாள் தீபாவுக்கு அவரது கணவருக்கும் சந்தை ஏற்பட்டதால் திடிரென்று ஜெயலலிதா சமாதிக்கு வந்த அவரது கணவர் மாதவன் தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன்.

தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தொடர்பாக மக்களிடம் பேசி முடிவு செய்வேன்' என்று ஒரு குட்டி தியானத்தைப் போட்டுவிட்டு சென்றார்.

 

சசிகலா சப்த தியானம்...

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி பெங்களுரு ஜெயிலுக்குப் போவதற்கு முன்னதாக முதலில் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அடித்து சபதம் செய்த சசிகலா பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமாபுரம் சென்ற சசிகலா கறை படியாத கை எனப் போற்றப்படும் எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது பன்னீர் பாணியில் வீட்டின் தரையில் அமர்ந்து கண்களை மூடி சசிகலா தியானம் மேற்கொண்டார்.

தியானம் 2.0

வங்க மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தைக் கேட்ட உடன் தியானம் கலைந்து டக்கென எழுந்த விஜயேந்திரர். தமிழில் பாடிய வாழ்த்து காதில் வாங்காமல் அமர்ந்துகொண்டிருக்கிறார்.

தமிழ் தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை தரல? ஏன் எழுந்து நிற்கல என கேட்டால் .. தியானத்தில் இருந்தார், அப்போது கலையவில்லை, அதனால் எழுந்து நிற்கவில்லை,  செம்ம விளக்கம் தந்து கடுப்பக்கியது  சங்கர மடம். ஒருவரால் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் தியானம் செய்ய முடியுமா? தியானம் குறித்துப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிவருகிறார்கள்.

click me!