பத்து மணி ஆகிடுச்சேனு பதற வேண்டாம்... கடைகளை இனி பூட்டவே மாட்டாங்க..!

By Thiraviaraj RMFirst Published Jun 6, 2019, 11:52 AM IST
Highlights

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு,  பணியாஅர் நலன் உள்ளிட்டவற்றை உறுதிபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்து வைக்கப்படுவதல் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசாணை மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் கடைகள் தொடர்ந்து இயங்கலாம். 

click me!