அண்ணாமலை… சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடறீங்களா…? ஆதாரத்தை ரிலீஸ் பண்ணுங்க.. செந்தில் பாலாஜி அதிரடி

By manimegalai aFirst Published Oct 23, 2021, 6:54 PM IST
Highlights

அண்ணாமலை சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுவராக இருந்தால் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக பதிலடி தந்துள்ளார்.

கோவை: அண்ணாமலை சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுவராக இருந்தால் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக பதிலடி தந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. மின்சாரத்துறை கமிஷன் குறித்து நாளும் ஒரு ஆவணத்தை வெளியிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தினமும் அது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். நான் மட்டும் என்ன சளைத்தவனா? என்கிற பாணியில் அண்ணாமலை டுவிட்டர் வெளியிட்ட அடுத்த சில மணித்துளிகளில் பதிலுக்கு பதில் என்பது டுவிட்டரில் பதிவை வெளியிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி காட்டி வருகிறார்.

இந் நிலையில் கோவை மாவட்ட வளர்ச்சி பணிகளின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அண்ணாமலை கூறும் விவகாரத்துக்கு பெரியார்  விளக்கம் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். அண்ணாமலை உண்மையில் நல்ல மனிதராக இருந்தால் சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால் நான் கேட்டபடி ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

ஆதாரமே இல்லாமல் தான் இருப்பதை காட்டிக் கொள்ள இவ்வாறு பேசி வருகிறார். அரவக்குறிச்சியில் இருந்து அவரை அனுப்பிவிட்டோம். கோவையில் மின்வாரியம் சார்பாக செய்தியாளர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு உள்ளது. எங்கு குறைகள் என்று பதிவிட்டால் மின்வாரியம் தரப்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

click me!