அகற்றுவேன்னு சொன்ன ஹெச்.ராஜா...! அதிரடியா எச்சரிக்கை விடுத்த சீமான்...!

First Published Mar 6, 2018, 4:50 PM IST
Highlights
Seeman warns of stupid warning


பெரியார் சிலை அகற்றப்படும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்துக்கு முடிந்தால் தொட்டுப்பார் என நாம் தமிழர் கட்சியின் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அங்குள்ள லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.

இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான் பெரியார் சிலையை முடிந்தால் தொட்டுப்பார் என ஹெச்.ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!