தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கும் 2000 ரூபாய் நிதி உதவி என்பது லஞ்சம் தான் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கும் 2000 ரூபாய் நிதி உதவி என்பது லஞ்சம் தான் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படுவார்கள். தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா உள்ளது. ஆட்சியையே அவர்கள் தான் நடத்துகிறார்கள். அவர்கள் தனித்து தேர்தலை சந்திக்க மாட்டார்கள். தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திப்பார்கள். எல்லா கட்சிகளும் வெற்றியை நோக்கி தான் செல்கிறார்கள். நாங்கள் தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை ஏற்க மறுக்கிறோம்’’ என்றார் சீமான்.