#BREAKING ஆ.ராசா பரப்புரை செய்ய தடையா?... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு விளக்கம்! ​

By Kanimozhi PannerselvamFirst Published Mar 29, 2021, 2:17 PM IST
Highlights

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிவரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க தடை விதித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்திருந்தனர். 

திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில்;- ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை” என்றும் ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ` கண்ணியம் குறைவான பேச்சை தலைமை ஏற்காது’ என சூசுகமாக அறிவுரை வழங்கியிருந்தார். ஆனால், தனது பேச்சை வெட்டி ஒட்டி திரித்துப் பரப்புகின்றனர் என ஆ.ராசா விளக்கம் அளித்திருந்தார். 

இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்பட்டு தழு தழுத்தார். பரப்புரையில் பேசிய அவர், `` இதை நான் பேச வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தாய்மார்களைப் பார்த்தால் பேசுகிறேன். எனது தாயைப் பற்றி கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் ஆ.ராசா.” என்றவர், சற்று உணர்ச்சிவசப்பட்டு தழு தழுத்து நின்றார். நான் எனக்காக பேசவில்லை. ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம். அப்படிப்பட்ட தாயைப் பற்றியே தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். தாயைப் பற்றி யார் தரக்குறைவாக பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பான்” என்றார். 

தமிழகம் முழுவதும் ஆ.ராசாவைக் கண்டித்து உருவ பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம், கண்டன பேரணி என போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்கு ஆ.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆ.ராசா நீலகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த;-முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன். இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவரிடம் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் தயக்கமில்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமல்ல. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த ஒப்பீடும், மதிப்பீடும்தான். முதல்வர் பழனிசாமி மனம் காயப்பட்டது குறித்த எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன் என தெரிவித்தார். 

ஆனால் தொடர்ந்து முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிவரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க தடை விதித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் தனி நபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஆ.ராசாவின் சர்ச்சை பேசு தொடர்பான அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

click me!