சசிகலா ரிலீசானால் அரசியலில் மாபெரும் மாற்றம் வரும்... சு.சுவாமி நம்பிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Mar 6, 2020, 5:03 PM IST
Highlights

சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
 

சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்; சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம். அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது. சிஏஏவினால் எந்த பிரச்சனையும் இல்லை, யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை. பாஜக தனியாக நின்று வெற்றி பெற முடியும், ஆனால் அதற்கான முயற்சி செய்யவில்லை.

சி.ஏ.ஏவால் எந்தப்பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை. ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம். அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக் கூராது. நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும்’’என அவர் தெரிவித்தார்.

click me!