சொத்து குவிப்பு வழக்கில் தற்போது தண்டனை பெற்று வரும் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை காண இதுவரை கடந்த மாதம் மட்டும் 14 பேர் வரை அவரை சென்று பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் சிறை விதியின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை வழக்கறிஞர் அல்லது உறவினர் அல்லது நண்பர் ஒருவர் மட்டுமே வந்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் சசிகலாவுக்கென தனி அறை, தியானம் செய்ய தனி அறை, வீட்டு உணவு என பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . உச்சநீதிமன்றம் அனுமதியை மறுக்கப்பட்டதையும் மீறி, அவருக்கு சிறை நிர்வாகம் பல சலுகைகள் வழங்கியதாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்த அனைத்து விவரமும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .