தீயா வேலை செய்யும் தினகரன் கேங்... தேடி பிடித்து அடிக்கும் தேர்தல் ஆணையம்

 
Published : Apr 05, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
தீயா வேலை செய்யும் தினகரன் கேங்... தேடி பிடித்து அடிக்கும் தேர்தல் ஆணையம்

சுருக்கம்

money payment for rk nagar people by dinakaran team

ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா செய்த டி.டி.வி தினகரனின் ஆதரவாளர்கள் 23 பேர் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் அவரவர் தகுதிகளுக்கேற்ப தங்களால் ஆன முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் எப்படியாவது ஆர்.கே.நகரில் ஜெயித்துவிட வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறார்.

அதற்கு ஆதரவாக அவரது அதாரவாளர்கள் பணபட்டுவாடா செய்வதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

தினகரனின் ஆதரவாளர்கள் பணபட்டுவாடா செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பணத்தை பிரித்து கொடுக்க முடியாமல் 500 ரூபாய் நோட்டுக்கும் 2000 ரூபாய் நோட்டுக்கும் சில்லறை தட்டுபாடு நிலவுவதாக தெரிகிறது.

தினகரனின் புது யுக்தியாக பணபட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. அதாவது, பேருந்தில் பயணிகள் ஏறினால் பணிகள் தான் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது வழக்கம். ஆனால் ஆர்.கே.நகரில் பேருந்தில் ஏறினால் பயணிகளுக்கு நடத்துனர் பணம் தருகிறாராம்.

இதேபோல் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகரில் வாழும் தொகுதிவாசிகளுக்கு வீட்டு பொருட்கள் என்னென்ன தேவை என்பதை ஒரு குழு குறித்து வைத்து கொள்கிறது.

பின்னர் அவற்றை வாங்கி கொண்டு டோர் டெலிவரி செய்ய மற்றொரு குழு தயாராகிறது.

தவிர ஜவுளி கடைகளில் டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர் தொப்பி கேங்.

இவ்வாறு பல யுக்திகளை கையாண்டு வருகிறது தினகரன் அணி.

இதை கண்டறிந்த அனைத்து கட்சிகளும் தினகரன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்களை அடுக்கி கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க படும் என தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்ததாக இதுவரை தினகரனின் அடியாட்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 70 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் என்னதான் ஆட்களை பிடித்தாலும் பணபட்டுவாடாவை நிறுத்த மாட்டேன் என தினகரன் எதுவும் கண்டுகொள்ளாமல் அவர் போக்கில் உள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்