
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா வேட்பாளர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் களமிறங்குகிறார். இன்று மாலை டி.டி.வி தினகரன் வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார் சரத்குமார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், தீபா பேரவை சார்பில் தீபாவும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், பா.ஜ.க சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரனும், சமக சார்பில் அந்தோணி சேவியர் உள்ளிட்ட 127 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
பின்னர், இறுதியாக 62 பேர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியதாவது:
ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரவே தினகரனுக்கு அதரவு அளித்துள்ளோம்.
எந்த ஒரு பிரச்சினைக்காகவும் மற்றவர்கள் ஆட்சியை கலைத்து விடக்கூடாது.
பிளவுபட்ட அணியை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை.
டி.டி.வி தினகரனை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.
கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவைகள் களைந்து அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
இவ்வாறு கூறினார்.