
பாவத்தை கழுவுவதற்காகவே நடிகர் கமல், ராமேஸ்வரம் சென்றுள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். அதற்காக ராமேஸ்வரம் சென்ற அவர் இன்று காலை 7.30 மணியளவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற்றார்.
அதன்பின், அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சென்றார். ஆனால், அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதையடுத்து, அங்கிருந்து அவர் திரும்பி சென்றார். அதன் பின்பு, மீனவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, தங்கள் பிரச்சனைகளை கேட்க வந்த கமல்ஹாசனுக்கு மீனவ நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கட்சி கொடி, கொள்கைகள் குறித்து இன்று மாலை அறிவிக்க உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன், ராமேஸ்வரம் சென்றுள்ளது. பாவத்தை கழுவுவதற்காகவே என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், நடிகர் கமல் ராமேஸ்வரத்தில் அரசியல் பயணம் துவக்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பாவத்தை கழுவுவதற்காக கமல், ராமேஸ்வரம் சென்றுள்ளார் என்று கூறினார்.