எடப்பாடியை பழிவாங்க சசிகலாவுடன் கைகோர்க்க தயார்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி கொந்தளிப்பு.!

By vinoth kumarFirst Published Jul 27, 2021, 7:46 PM IST
Highlights

ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகிய இருவரும் அதிமுகவை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றி கொள்ள டெல்லி தெருக்களில் அலைகிறார்கள் என்பது தான் உண்மை. 

சசிகலா ஒருவரால் தான் அதிமுக கட்சியை காப்பாற்ற முடியும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியால் கட்சியை காப்பாற்ற முடியாது என புகழேந்தி கூறியுள்ளார்

சமீபத்தில் அன்புமணியை விமர்சனம் செய்து ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுத்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி எடப்பாடி பழனிசாமியால் அக்கட்சியில் இருந்து அதிரடியாக  நீக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை திடீரென புகழேந்தி சந்தித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தொலைக்காட்சி விவாத நிகழ்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராக பொறுபேற்றுள்ளார். அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன். 

ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகிய இருவரும் அதிமுகவை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றி கொள்ள டெல்லி தெருக்களில் அலைகிறார்கள் என்பது தான் உண்மை. கட்சியை காப்பாற்ற அல்ல. மிகவும் மோசமான நிலையில் அதிமுக மீட்டெடுக்க முடியாமல் எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் உள்ளது. மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து சென்றிருக்க வேண்டும். ஒ.பி.எஸ் இபிஎஸ் ஆகியோர் தங்கள் அடிமை வாழ்வை தொடர டெல்லி வீதிகளில் சுற்றி வருகிறார்கள்.

மேலும், சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்பதற்க்கும் தயாராக இருக்கிறேன். சசிகலா அவர்களால் தான் இந்த கட்சியை காப்பாற்ற முடியும். ஒ.பி.எஸ் - இ.பி.எஸ்ஆல்  கட்சியை காப்பாற்ற முடியாது. இன்றைய தினம் திமுக இல்லை என்றால் திராவிட இயக்கத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. 

click me!