
“ரெடி 123.....ஜூட்”.......ஒவ்வொரு எம்எல்ஏக்களும் ஓடோடி வர தொடங்கியாச்சி......!!!
கூவத்தூர்:
கூவத்தூர் என்றாலே அந்த அளவுக்கு சமீபத்தில் பெயர் போன ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஒரு வார காலத்திலேயே பிரபலம் அடைந்த ஒரு பகுதி என்றால் அது கூவத்தூர்.
கூவத்தூர் ரிசார்ட்ஸ் :
சிறைபிடித்து வைக்கபட்டதாக கூறப்படும் சசிகலா ஆதரவு எம் எல் ஏக்கள் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்தும் அதே இடத்திற்கு சென்று சேர்ந்தது. அதாவது சசிகலா வின் கட்டுப்பாட்டில் இருந்தார் கள் எம் எல் ஏக்கள் . இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததால், எம்எல்ஏக்கள் தற்போது , பன்னீருக்கு ஆதரவாக களம் இறங்க தொடங்கியுள்ளனர்.
தீர்ப்பு :
சசிகலாவிற்கு எதிராக தற்போது, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்த எம் எல் ஏக்கள் , ஒவ்வொருவராக கட்சி தாவ, அதாவது பன்னீர் அணிக்கு வர தொடங்கியுள்ளனர்.
பன்னீருக்கு பலம் :
இதன் மூலம், ஏற்கனவே பல எம்எல்ஏக்கள் பன்னீருக்கு ஆதரவாக இருக்கும் இந்த தருவாயில்,சசிகலா வசம் இருக்கும் மற்ற எம் எல் ஏக்கள் பன்னீர் அணிக்கு தாவி வருவதால், அவருக்கு பலம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.