சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு திருட்டு தான்.! ஓபிஎஸ் புலியா? பூனையா? விரைவில் தெரியும்-ஆர்.பி உதயகுமார்

By Ajmal KhanFirst Published Aug 30, 2022, 2:58 PM IST
Highlights

பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஒ.பி.எஸ் செய்து வருவதாக குற்றம்சாட்டிய ஆர்.பி.உதயகுமார் ஒ.பி.எஸ் புலியா? பூனையா? என தொண்டர்களை சந்திக்கும் போது தெரிய வரும் என விமர்சித்துள்ளார்

ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.பி. உதயகுமார் விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் சொந்த வீட்டில் யார் திருடுவார்கள் என கூறியிருந்தார். இந்தநிலையில் மதுரை கேகே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.  "ஜெயலலிதா கனவுகளை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி நனவாக்கியவர், எவ்வளவோ சோதனைகளை சாதனையாக மாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒட்டுமொத்த அதிமுகவும், அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக உள்ளனர், எடப்பாடி பழனிச்சாமி 99 சதவீத அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர், 66 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 63 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர், ஒ.பி.எஸ் க்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாததை போல அதிமுக தொண்டர்கள் என்னை தான் ஆதரிக்கிறார்கள் என ஒ.பி.எஸ் வாய்ப்பாடு பாடி வருவதாக விமர்சித்தார். 

தமிழக அரசின் முடிவுக்கு பல்கலைக்கழகங்கள் கட்டுப்பட வேண்டும்.! ஆளுநருக்கு செக் வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு தான்

அதிமுக தலைமையே ஏற்க்கும் பண்பை ஒ.பி.எஸ் இழந்து விட்டார், சொந்த வீட்டில் திருடினாலும் திருட்டு திருட்டு தான், அதிமுக அலுவலகம் தொண்டர்களின் சொத்து, அப்படிபட்ட சொத்தை ஒ.பி.எஸ் திருடி இருக்கிறார், பெரியகுளத்தில் தங்கி தனக்கு ஆட்கள் பிடிக்கும் வேலையை ஒ.பி.எஸ் செய்து வருகிறார், என்ன நடந்தாலும் இறுதி வெற்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் கிடைக்கும் என தெரிவித்தார். ஒ.பி.எஸ் நிராயுத பாணியாக இருப்பதால் அவ்வப்போது புலம்பி வருகிறார், அதிமுக தலைமை பதவி மீது எனக்கு ஆசையில்லை என ஒ.பி.எஸ் நாடக பேச்சாக பேசி வருகிறார், ஒ.பி.எஸ்யின் நாடக பேச்சு மக்களிடம் எடுபடாது, அதிமுகவையும், அதிமுக அரசை வலுப்படுத்த இ.பி.எஸ் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒ.பி.எஸ் முட்டுக்கட்டையாக இருந்தார், இ.பி.எஸ் பலமாக இருக்கிறார், ஒ.பி.எஸ் பலவீனமாக இருக்கிறார், 

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம்..! ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு டிடிவி தினகரன் திடீர் அழைப்பு

மிட்டாய் காண்பித்து ஏமாற்றுகிறார்கள்

 2001 ல் ஒ.பி.எஸ் முதலமைச்சர் ஆனது உழைப்புக்கு கிடைத்தது என சொல்கிறார், ஆனால் எதனால் ஒ.பி.எஸ் க்கு முதல்வர் பதவி கிடைத்தது என 1 1/2 கோடி தொண்டர்களுக்கு தெரியும், திரும்ப திரும்ப ஒ.பி.எஸ் முதலமைச்சர் ஆனது குறித்த சித்து விளையாட்டு என்ன எனபது யாருக்கும் தெரியவில்லை, சசிகலா, டி.டி.வி யை அழைத்ததன் மூலம் ஒ.பி.எஸின் நிலைப்பாட்டு மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை, எம்.எல்.ஏ அய்யப்பன் ஒ.பி.எஸிடம் சென்றது தவறான வழி, குழந்தையை முட்டாயை காண்பித்து அழைத்து செல்வது போல எம்.எல்.ஏ அய்யப்பன் அழைத்து செல்லப்பட்டு உள்ளார், காலம் வரும் உண்மை நிலவரத்தை ஒ.பி.எஸ் பக்கம் உள்ளவர்கள் அறிவார்கள், உண்மையான நிலவரத்தை ஒ.பி.எஸ் புரட்சி பயணம் செல்லும் போது தான் அறிவார், ஒ.பி.எஸ்க்கு ஒரு விதமான பதட்டம் இருக்க தான் செய்கிறது, ஒ.பி.எஸ் புலி வருகிறது என சொல்லி வருகிறார், அது புலியா? பூனையா? என பின்னரே தெரிய வரும்" என ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

இதையும் படியுங்கள்

உலக கோட்டீஸ்வரர்கள் பட்டியலில் ஓ.பி.எஸ்..! இனி அவருடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது- ஜெயக்குமார்

 

click me!