முதல் ஆளாக முந்தி கொண்டு மோடிக்கு வாழ்த்து சொல்லிய ரஜினி!

Published : May 23, 2019, 02:34 PM IST
முதல் ஆளாக முந்தி கொண்டு மோடிக்கு வாழ்த்து சொல்லிய ரஜினி!

சுருக்கம்

நாடாளு மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் துவங்கி பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  

நாடாளு மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் துவங்கி பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில் பாஜக 348 மக்களவை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் மற்றும் பாஜக அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், பாஜக தொடர்ந்து 300 க்கும் அதிகமான இடங்களில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. எனவே இந்த மகிழ்ச்சியை பாஜக தொண்டரங்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  முதல் ஆளாக முந்தி கொண்டு, ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், மதிப்பிற்குறிய நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு, இதயம்கனிந்த வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவு இதோ... 

PREV
click me!

Recommended Stories

7 நாட்களில் பதவி விலக வேண்டும்.. மத்திய அமைச்சருக்கு கெடு விதித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் CM Vijay! : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு!