#UnmaskingChina:ஏன் வீரர்கள் நிராயுதபாணிகளாக இருந்தனர், அதற்கு யார் காரணம்..? மோடியை துளைக்கும் ராகுல் காந்தி!

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2020, 3:46 PM IST
Highlights

இந்நிலையில் நமது ராணுவ வீர்கள் நள்ளிரவில் எல்லையில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருடன் அமைத்தி பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும்

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சீனர்களை எதிர்த்துப் போராடி 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ராணுவ வீரர்களை ஆயுதமின்றி பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார், இதற்கு யார் பொறுப்பு ஏற்பது என ராகுல் காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய வீரர்களை கொன்று சீனா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என கோபம் கொந்தளிக்கும் அவர், நம்  படைவீரர்களை நிராயுதபாணிகளாக அனுப்பியதற்கு யார் காரணம் எனக் கேள்வி எழுப்பி வருகிறார். கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் நமது ராணுவ வீர்கள் நள்ளிரவில் எல்லையில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருடன் அமைத்தி பேச்சு வார்த்தை நடத்த சென்றதாகவும் அப்போது முன்கூட்டியே தாக்க தயாரிப்புடன்  இருந்த சீனர்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் நம் வீரர்கள் பதில் தாக்குதல் நடந்தி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிப்படைய வைத்துள்ளது. 

இந்நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார்.  அதில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த நிராயுதபாணிகளாக சென்ற இந்திய ராணுவ வீரர்களை கொன்று சீனா ஒரு பெரும் குற்றத்தை செய்துள்ளது. நான் ஒன்று கேட்கிறேன், நம் வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்.? அது ஏன்.? அந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பி உள்ளார். எல்லையில் இந்திய வீரர்கள் ஏன் நிராயுதபாணிகளாக  இருந்தார்கள், நமது வீரர்களை கொள்ள  சீனாவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது, உயிரை இழந்த எங்கள் வீரர்கள் ஏன் நிராயுதபாணிகளாக அனுப்பப்பட்டனர் என அவர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார் இதற்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் பதிலளிக்க  வேண்டுமெனவும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.   

 

click me!