
சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், முன்னாள் அமைச்சர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதனிடையே சசிகலா முதலமைச்சர் ஆக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது எடுபடவில்லை. சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அவர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் செல் இணைப்பை துண்டித்து விட்டனர். இதைதொடர்ந்து தொகுதிவாசிகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் எடப்பாடிக்கு ஆதரவாகவும் ஓ.பி.எஸ்க்கு எதிராகவும் வாக்களித்தனர்.
இந்நிலையில் புதிய அமைச்சரவை எம்.எல்.ஏக்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது. அதையும் மீறி சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பயம்தான் வெளியே தென்படுகிறதாம்.
இதன் ஒரு பகுதியாக மேலூர் எம்.எல்.ஏ செல்வம் தொகுதிக்கு செல்லாமல் சென்னை ஹாஸ்டலிலேயே தங்கி கிடக்கிறாராம்.
பதிலுக்கு அந்த இளைஞர் உங்கள் குரலில் மிரட்டல் தொனி தெரிகிறது. தொகுதி பக்கம் வாருங்கள் பார்த்து கொள்கிறோம் என்று மிரட்டி விட்டு செல்லை வைத்துள்ளார்.
இந்த வாய்ஸ் மெசேஜ் அனைத்து வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இதனால் மற்ற சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் பீதியை கிளப்புகிறதாம்.
எதிர்ப்பு வலுத்துள்ளதால் கட்சிகளின் கூட்டத்திற்கு மற்றும் நிகழ்சிகளுக்கு கூட போலீஸ் பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் புதிய அமைச்சரவை என்ன பாடு பட போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.