தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்..!

Published : Oct 19, 2018, 12:04 PM ISTUpdated : Oct 19, 2018, 12:29 PM IST
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்..!

சுருக்கம்

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தேமுதிக தொடங்கி பதினான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேமுதிக மகளிர் அணி தலைவியாக இருந்த பிரேமலதா, பொருளாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

தேமுதிகவின் பொது செயலாளராக இருக்கும் விஜயகாந்த், தற்போது மீண்டும் அக்கட்சியின் தலைவராகவும், நிரந்தர பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவராக இளங்கோவனும், கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜூம் நியமனம் செய்யப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!