விஜயகாந்தின் உடல் அடக்கம் எங்கே.?காந்தி மண்டபமா.? தேமுதிக அலுவலகமா? முதல்வரிடம் பிரேமலதா வைத்த கோரிக்கை என்ன.?

By Ajmal KhanFirst Published Dec 28, 2023, 11:27 AM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய பிரேமலதா முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், எந்த இடத்தில் அடக்கம் செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலமானார் விஜயகாந்த்

திரை உலகிலும், அரசியலிலும் சாதித்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது விஜயகாந்த் சுய நினைவின்றி காணப்பட்டார். இதனை பார்த்த தொண்டர்கள் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Latest Videos

அரசு மரியாதையோடு உடல் அடக்கம்

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சளி அதிகாமி இருப்பதாக தெரிவித்தனர். மேலும் நிம்மோனியா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜயகாந்தின் தொண்டர்கள் அவரது வீடு முன் திரண்டுள்ளனர். விஜயகாந்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். தற்போது விருகம்பாக்கம் வீட்டில் இருந்து விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொண்டர்களின் அஞ்சலியை தொடர்ந்து இன்று மாலை ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெரினாவா.? காந்தி மண்டபமா.?

இதனிடையே விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் விஜயகாந்தின் உடல் எந்த இடத்தில அடக்கம் செய்யப்படவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இனி யாருடைய உடலையும் அடக்க செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே காந்தி மண்டபம் பகுதியில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கொடுக்குமா.? என்ற கேள்வியானது எழுந்துள்ளது. இந்தநிலையில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை.. ஃபிளாஷ்பேக்கை சொல்லி கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

click me!