புல்லட் நாகராஜனுக்கு அடைக்கலம் கொடுத்த போலீஸ் … விசாரணையில் திடுக்கிடும் தகவல் !!

By Selvanayagam PFirst Published Sep 10, 2018, 10:11 PM IST
Highlights

கடந்த ஒரு வாரமாக போலீசை வாட்ஸ் அப்பில் மிரட்டிக் கொண்டிருந்த ரௌடி புல்லட் நாகராஜனுக்கு  சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகள் அடைக்கலம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. கூடுதல் எஸ்.பி.  சுருளிராஜன்  தலைமையில் நடந்த விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான புல்லட் நாகராஜன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீசாரை விமர்சித்து வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதன கலாவையும் இவர்  மிரட்டியுள்ளார்.

அந்த ஆடியோவில் நான் சட்டத்தை விரல் நுனியில் வைத்துள்ளேன். என் வீட்டுக்கு சென்று சோதனை நடத்துவதாக இருந்தால், கோர்ட்டில் உத்தரவு வாங்காமல் எதுவும் செய்தீர்கள் என்றால் அம்புட்டு பேரும் ஜெயிலுக்கு போவது உறுதி. குணா, நீ ஒரு முட்டாள். உன்னை யார் சி.பி.சி.ஐ.டி.யில் சேர்த்தது. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு முட்டாள்.
 


அண்ணன் இப்போ எங்கேயோ போயிட்டேன். டாப் லெவலுக்கு. என் முடியை கூட உன்னால் கண்டுபிடிக்க முடியாது. நீ உலகம் முழுவதும் தேடினாலும் என்னை தொட முடியாது. நானாக விரும்பினால் தான் உன் முன்னால் வருவேன்.

நான் சட்டம் படித்தவன். நான் எப்படி கொலை செய்வேன். தண்டிப்பேன் என்று சொல்லலாம். அது கோர்ட்டில் வைத்து தண்டிக்கலாம். இந்த நாகராஜனுக்கு என்று ஒரு கோர்ட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். நான் பிறந்த மண்ணை விட்டு ஓடிப் போய்விட்டேன் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். என்னை பாதுகாத்துக் கொண்டால் தானே உங்கள் எல்லாருக்கும் ஆப்பு வைக்க முடியும் என கண்டபடி பேசியிருந்தார்..

இதற்கிடையே, உலகில் எங்கு தேடினாலும் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று சவால்விட்டு வந்த புல்லட் நாகராஜனை இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் சிஎஸ்ஐ சர்ச் அருகே சினிமா பாணியில் விரட்டிச் சென்று  பிடித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் தென்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது வீட்டை சோதனையிட்டதில் பயங்கர ஆயுதங்கள், கள்ள ரூபாய் நோட்டுக்கள் என பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன..

இந்நிலையில் புல்லட் நாகராஜனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியகுளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகள் அடைக்கலம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

click me!